PRAYER BOOKS





PRAYER BOOKS (.pdf files)  -  To Download  Click Here




  • இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்



இயேசுவின் திருஇதயமே எங்கள் குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நன்றி கூறுகின்றோம். எங்களை ஆசீர்வதியும். எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும். பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும். விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும் நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும். சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில் இருக்கின்றவர்களை ஆசீர்வதியும். உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும். மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும். ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும். எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும். ஆமென்.


  • இயேசுவின் திருஇருதய மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய
இயேசுவின் திருஇதயமே
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திருஇதயமே
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த
இயேசுவின் திருஇதயமே
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய
இயேசுவின் திருஇதயமே
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான
இயேசுவின் திருஇதயமே
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான
இயேசுவின் திருஇதயமே
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான
இயேசுவின் திருஇதயமே
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற
இயேசுவின் திருஇதயமே
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
இயேசுவின் திருஇதயமே
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான
இயேசுவின் திருஇதயமே
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும்
இயேசுவின் திருஇதயமே
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள
இயேசுவின் திருஇதயமே
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
இயேசுவின் திருஇதயமே
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான
இயேசுவின் திருஇதயமே
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்

இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்

மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
  • என்னோடு தங்கும் ஆண்டவரே
நற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்
என்னோடு தங்கும் ஆண்டவரே! உம்மை மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க உமது பலம் எனக்குத் தேவை.
என்னோடு தங்கும் ஆண்டவரே. எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை.
என்னோடு தங்கும் ஆண்டவரே. நீரே என் ஒளி. ஏன்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் ழ்கின்றேன்.
உமது சித்தம் எதுவென எனக்குத் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே.
உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே.
என்னோடு தங்கும் ஆண்டவரே. இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லையென்றாலும் உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.
என்னோடு தங்கும் யேசு சுவாமி. தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்கு தாரும் சுவாமி.
என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகின்றேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன்.
இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்
.

  • இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை நோக்கி செபம்
கொடிய உபாதைகளினாலும் பாடுகளினாலும் மனிதர்களின் இழிந்தவாராகவும் வியாகுலம் நிறைந்த மனிதனாகவும் ஆன ஓ யேசுவே! ஒருக்கால் தெய்வீகத்தின் அழகு சௌந்தயமும் இனிமையும் ஒளி வீசியதும், இப்போது ஓர் குடரோகியினதைப் போல ஆகியிருக்கிறதுமான உமது திருமுகத்தை ஆராதித்து வந்திருக்கின்றேன். நைந்து நொறுங்கி உருகுலைந்த உமது திருமுகத் தோற்றத்தில் உமது அளவற்ற அன்பைக் காண்கிறேன். அதனால் நான் உம்மை நேசிக்கவும் மற்றவர்கள் உம்மை நேசிக்கச் செய்யவும் என் உள்ளம் ஆவலால் நிரம்பியிருக்கிறது. ஒளிவீசும் வரை கற்கள் போன்று உமது திருக்கண்களில் ததும்பும் கண்ணீரை வாச் சேர்த்து அவைகளினால் பாவிகளின் ஆத்துமங்களை இரட்சிக்க விரும்புகிறேன். உமது ஆராதனைக்குய திருமுகத்தால் என் இதயத்தை இன்பக் கடலில் ஆழ்த்தும் ஓ இயேசுவே! உமது தெய்வீகப் பிரதிமையை என் உள்ளத்தில் ஆழமாய் பதித்தருளும். எனது இருதயம் உமது நேச அக்கினியால் பற்றியெயவும், அதனால் உமது ஜெகஜோதி முகத்தை மோட்சத்தில் கண்டு ஆனந்திக்க அருகதை உள்ளவனாக ஆகவும் கிருபை புந்தருள வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். அன்றியும் எனது தற்போதைய தேவையில் எனது இருதயப் பேராவலைக் கையேற்றுக் கொண்டு உம்மிடமாய் நான் தாழ்மையோடு கேட்கும் மன்றாட்டை அடியேனுக்கு தந்தருளும். சுவாமி. ஆமென் யேசு.


  • கிருபைதயாபத்து செபம்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, என் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும். இதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே தாயாபரியே, பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே. ஆமென்.



  • குழந்தை இயேசுவின் நவநாள் செபம்


அற்புதக் குழந்தை இயேசுவே, அமைதியற்ற எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்படி தாழ்ந்து பணிந்து வணங்கி உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். (வரத்தைக் குறிப்பிடுக…) எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தைப் பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.



  • குழந்தை இயேசு மன்றாட்டு மாலை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவாகிய சர்வேசுரா … …
உலகத்தை மீட்ட சுதனாகிய சர்வேசுரா … …
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, … …
உண்மை மனிதனும் ஆண்டவருமான பாலனே
உமது வல்லமையால் ஆச்சரியங்களைக் காட்டும் பாலனே
உமது வல்லமையால் எமக்கு மனத்துணிவு தரும் பாலனே
உமது வல்லமையால் தீமையகற்றும் பாலனே
உமது வல்லமையால் நரகத்தை வெல்லும் பாலனே
உமது வல்லமையால் உலகத்தையே கையில் ஏந்திய பாலனே
எமது இதயங்களை அறிந்து அளவிலா ஞானம் நிறைந்த பாலனே
உமது கடைசிகதி அடைய உமது பராமரிப்பினால் ஏவுகின்ற பாலனே
உமது உண்மை ஒளியால் எமது இதய இருளைப் போக்கவல்ல பாலனே
உமது தயாளத்தில் எமது ஏழ்மையைப் போக்கும் பாலனே
எமது துன்ப வேளையில் ஆளுதலளிக்கும் பாலனே
உமது இரக்கத்தால் எங்களுக்கு மன்னிப்புதரும் பாலனே
உமது நீதியால் எம்மை பாவத்தில் விடாது காக்கும் பாலனே
உமது அழகின் பார்வையால் எமது இதயங்களை கவரும் பாலனே
உமது அன்புத்தீயால் எமது குளிர்ந்த இதயங்களை
பற்றியெயச் செய்யும் பாலனே
உமது புதுமை கரங்களால் எல்லா ஆசீரையும் அருளும் பாலனே
உமது புனித நாமத்தால் விசுவாசிகளின் இதயங்களை
இன்புறச் செய்யும் பாலனே
உமது மகிமையால் உலகத்தை நிரப்பும் பாலனே
எல்லாத் தீமைகளிலிருந்தும் இயேசுவே எங்களைக் காத்தருளும்
எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது அளவற்ற நன்மைத் தனத்தை ஏற்றுக்கொள்ளாத அவநம்பிக்கையிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது புதுமைசெய்யும் வல்லமைகளுக்கு விரோதமாக எழும் சந்தேகங்களிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமக்கு ஆராதனை செய்யும் குறைபாடுகளிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது கன்னித்தாய் மரியாள், புனித சூசையப்பர் இவர்களின் வேண்டுதலால் இயேசுவே எங்களைக் காத்தருளும்
எமக்கு நேரிடும் எல்லாவித தீமைகளிலிருந்து
இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது மன்னிப்பை எங்களுக்குத் தரும்படியாக உம்மை மன்றாடுகின்றோம். எம் மன்றாட்டைக் கேட்டருளும்
உமது பாலபருவத்தின் மட்டில் எமது அன்பையும் பக்தியையும் வளர்க்கும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது எண்ணற்ற பேருதவிகளை நாங்கள் எப்போதும் நினைவுகூரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது இயேசுவின் திருஇருதய அன்பால் எம்மை பற்றியெரியச்செய்ய உம்மை மன்றாடுகிறோம்
உம்மை நம்பிக்கையுடன் அழைக்கும் அனைவரின் மன்றாட்டுகளுக்கும் செவிசாய்க்கும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உம்மிடம் பக்தியுள்ள எல்லோருக்கும் நித்திய வாழ்வு தரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது இரக்கமுள்ள தீர்ப்பை எம் இறுதிநாளில் தரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்


மன்றாடுவோமாக
அற்புதமான இயேசு பாலகனே, இதோ உம்முன் விழுந்து கிடக்கின்றோம். துன்பம் நிறைந்த எமது இதயங்களின் மேல் உமது இரக்கத்தைப் பொழிந்தருளும். எமக்கு வரும் கவலைகளையும் தீமைகளையும் துன்பங்களையும், அவநம்பிக்கையையும் அகற்றி எமது வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும். உம்மைப் பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் புகழ்ந்து பாடும்படி உமது புனித பால உருவத்தை முன்னிட்டு எமக்கு ஆறுதலையும் உதவியையும் தந்தருளும். ஆமென்.

  • திருப்பலி செபங்கள்

குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே
எல் : ஆமென்

குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக

குரு : சகோதர சகோதரிகளே, திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும்பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்..
எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்

குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்
குரு : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்

வானவர் கீதம்
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.
பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா,
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே.
ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே,
பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்,
நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்.
பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய
சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. ஆமென்.

விசுவாச அறிக்கை
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை,
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
கடவுளின் ஏக சுதனாய் செனித்த,
ஒரே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
இவர் யுகங்களுக்கெல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
மெய்யங் கடவுளினின்று மெய்யுங் கடவுளாக செனித்தவர்.
இவர் செனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
பிதாவோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும்,
வானகமிருந்து இறங்கினார்.
தூய ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு,
சிலுவையிலே அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.
சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க,
மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
அவரது அரசுக்கு முடிவிராது.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் விசுவசிக்கின்றேன்.
இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக,
ஆராதனையும் மகிமையும் பெருகின்றார்.
தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஏக பரிசுத்த கத்தோலிக்க,
அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும்
ஏற்றுக் கொள்கின்றேன்.
மரித்தோர் உத்தானத்தையும்,
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.

குரு : சகோதர சகோதகளே, நாம் அனைவரும் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.
எல் : ஆண்டவர் தமது திருச்சபையின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல் : அது தகுதியும் நீதியுமானதே
குரு : ஆண்டவரே தூயவரான . . …. … …. ஒரே குரலாய் சொல்வதாவது.
எல் : பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். மூவுலகின் தேவனாகிய ஆண்டவர். வானமும், பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஓசான்னா. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஓசான்னா.

திருவிருந்து சடங்கு
குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சிபெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

எல் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

குரு : ஆண்டவரே தீமை… ….. ….. மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்
எல் : ஏனெனில் அரசும் வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே
குரு : ஆண்டவராகிய இயேசு … … என்றென்றும் ஆட்சிசெய்கின்றவர் நீரே
எல் : ஆமென்
குரு : ஆண்டவருடைய அருளும் அமைதியும் உங்களோடு என்றும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள்மேல் இரக்கமாயிரும் (2)
உலகின் பாவம் போக்கம் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை தந்தருளும்.

குரு : இதோ இறைவனின் செம்மறி! இதோ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர் பேறுபெற்றோர்.
எல்š : ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : எல்லாம் வல்ல இறைவன், தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக
எல் : ஆமென்
குரு : சென்று வாருங்கள். திருப்பலி நிறைவேறிற்று.
எல் : இறைவா உமக்கு நன்றி.





  • தூய அந்தோனியார் நவநாள் செபம்


புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோனியாரே எங்கள் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.


  • தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
கன்னியரில் உத்தம கன்னிகையே
பதுவைப் பதியரான தூய அந்தோனியாரே
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோனியாரே
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோனியாரே
தவ வலிமை மிக்க தூய அந்தோனியாரே
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோனியாரே
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோனியாரே
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோனியாரே
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோனியாரே
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோனியாரே
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோனியாரே
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோனியாரே
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோனியாரே
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோனியாரே
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோனியாரே
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோனியாரே
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோனியாரே
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோனியாரே
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோனியாரே
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோனியாரே
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோனியாரே
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோனியாரே
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோனியாரே
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோனியாரே
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோனியாரே
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோனியாரே
விஷஉணவு அருந்திய தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோனியாரே
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோனியாரே
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோனியாரே
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோனியாரே
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோனியாரே
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோனியாரே
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோனியாரே
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோனியாரே
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோனியாரே
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோனியாரே
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்

மன்றாடுவோமாக
தூய அந்தோனியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • தூய ஆவியை நோக்கிய செபம்

தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.
- கர்தினால் மெர்சியா

  • தூய சூசையப்பருக்கு நவநாள் செபம்

எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய், உம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக புனித சூசையப்பரைத் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும் எங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும். அதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும் இறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக. இறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருச்சபைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும். திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த நித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக. இயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை உமது வாழ்க்கையின் துணைவராகவும் உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. திருக்குடும்பத்தை உம் உழைப்பாலும் உணவூட்டிக் காத்த புனித சூசையப்பரே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து செழிப்புறச் செய்து துணைபுரிவீராக.
குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே, எங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.
இயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நன்மரணமடைந்த புனித சூசையப்பரே, நாங்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக. ஆமென்
.



  • தூய சூசையப்பர் மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய சூசையப்பரே
தாவீது அரசரின் புகழ்பெற்ற புத்திரனே
முதுபெரும் தந்தையரின் மகிமையே
தேவதாயாரின் பத்தாவே
கன்னி மரியாளின் கற்புள்ள காவலனே
தேவகுமாரனை வளர்த்த தகப்பனே
கிறிஸ்துவை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே
திருக்குடும்பத்தின் தலைமையானவரே
உத்தம நீதிமானான புனித சூசையப்பரே
உத்தம விரத்தரான புனித சூசையப்பரே
உத்தம விவேகமுடைத்தான புனித சூசையப்பரே
உத்தம தைரியசாலியான புனித சூசையப்பரே
உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித சூசையப்பரே
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான புனித சூசையப்பரே
பொறுமையின் கண்ணாடியே
தரித்திரத்தின் அன்பனே
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே
இல்லற வாழ்க்கையின் ஆபரணமே
கன்னிகைகளின் காவலனே
குடும்பங்களின் ஆதரவே
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே
வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே
மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே
பிசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே
புனிதத் திருச்சபையின் பரிபாலனே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே -3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்

ஆண்டவர் அவரை தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்
அவருடைய உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்

மன்றாடுவோமாக
இறைவா, நீதிமானாகிய புனித சூசையப்பரைக் கன்னியான தேவதாய்க்கு கணவராகத் தந்தருளினீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்துவை ஒப்படைத்தீர். அந்த புனிதன் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியை தொடர்ந்தாற்ற உமது அருட்கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

  • குருக்களுக்காக செபம்

தேவ வரங்கள் பொழிபவர்
தேவ வரங்கள் பொழியும் புனித ததேயுசே
தேவையில் வந்து உதவும் அன்புத் தீபமே
பரமன் இயேசு வழியில் எம்மை நடத்திட
இறைவன் தந்த சொந்தம் என்று நினைக்கிறோம்
உண்மை நெறியும் உயர்ந்த மனதும் வேண்டுமே
நிறைந்த வாழ்வும் வழியும் என்னில் வேண்டுமே
கல்லும் முள்ளும் எரிந்து போகவேண்டுமே
கருணை வெள்ளம் என்னில் கசிய வேண்டுமே
துன்பம் போக்கும் துயரம் நீக்கும் தூயனே
இன்பம் பெருகி இருளில் ஒளிரும் நேயன
கன்றி வந்த கண்கள் உம்மை பாருமே!
கருணை இறைவன் பாதம் எம்மை சேருமே

  • புனித தோமையாருக்கு நவநாள் செபம்

எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்கப் பேறுபெற்ற புனித தோமையாரே, உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம். ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் மீது கொண்டிருந்த உன்னத பற்றுதலால் அவரோடு சாகவும் துணிந்து உடன் அப்போஸ்தலர்களுக்கும் ஊக்கமூட்டி வாழவும், வழியும், வாய்மையுமான அவரை உலகெங்கும் அறிவித்தீரே. உம்முடைய தூதுரைக்கு நன்றி கூறுகின்றோம். ஆணிகளின் ஈட்டியின் காயத் தழும்புகளைத் தரிசித்து, உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொண்டு எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தியவரே நாங்கள் எங்கள் விசுவாசத்தில் தளராமல் வாழ்ந்திட அருள்புரியும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அற்புதங்களால் எங்கள் முன்னோர்களின் பலரை சத்திய மறைக்கு கொணர்ந்தீர். இன்னும் எங்கள் நாட்டில் கிறிஸ்துவை அறியாதோர் அவரை அறியவும், அறிந்து அன்பு செய்யவும், இந்தியக் கிறிஸ்துவர் அனைவரும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் சிறந்து உலகின் உப்பாகவும், உலகின் ஒளியாகவும் வாழ்ந்திட வரம் பெற்றுத் தருவீராக.



  • புனித தோமையார் மன்றாட்டு மாலை


ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவாராயிருக்க பேறுபெற்ற புனித தோமையாரே
உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவை ஆவலோடும் பிரமாணிக்கத்தோடும் பின்பற்றிய புனித தோமையாரே
வாழ்வளிக்கும் நற்செய்தியை பலநாட்டு மக்களுக்கு சிறப்பாக எங்கள் இந்திய நாட்டிற்கு அறிவிக்க வந்த புனித தோமையாரே
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவே வாழ்வும் வழியும் வாய்மையும் என அறிவிக்கச் செய்திட்ட புனித தோமையாரே
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடு சென்று உயிர்துறக்க உடன் அப்போஸ்தலர்களுக்கு ஊக்கமூட்டிய புனித தோமையாரே
உயிர்த்த ஆண்டவரை தரிசித்து என் ஆண்டவரே என் கடவுளே என்று அவரிடம் சரணடைந்த புனித தோமையாரே
நாங்கள் இயேசுகிறிஸ்துவின் உத்தம சீடர்களாய் என்றும் வாழ்ந்திட அருள்பெற்றுத் தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலியாமலிருக்க வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் சொல்லாலும் செயலாலும் இயேசுவின் சாட்சிகளாய் விளங்கிட வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இயேசுகிறிஸ்து ஒருவரே எங்கள் வாழ்வு வழி வாய்மை என்பதை கண்டுணர்ந்து அதற்கேற்ப வாழ வரம் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே
கிறிஸ்துவுக்காக எதையும் தாங்கும் தியாக உள்ளத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே
உயிர்த்த ஆண்டவரே, எங்களுக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவரில் சரணடையும் வரத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே

மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் பாதுகாவலராகிய அப்போஸ்தலரான புனித தோமையாரை பெருமையுடன் கொண்டாடும் நாங்கள், அவரது பாதுகாவலில் ஆறுதலும், வழிநடத்துதலில் ஆதரவும், போதனையில் ஆதாரமும் பெறுவோமாக. உம் திருமகன் இயேசு கிறிஸ்துவே ஆண்டவரும் இறைவனுமானவர் என்ற அவரது விசுவாச அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொண்டு எங்கள் சொல்லாலும் செயலாலும், அதற்கு சான்று பகர அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

  • மரியன்னை மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய்மை நிறை மூவொரு இறைவா
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் சிறந்த கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
இறையருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
மீட்பரின் அன்னையே
திருச்சபையின் அன்னையே
அறிவுமிகு அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
வல்லமையுள்ள அன்னையே
தயையுள்ள அன்னையே
நம்பிக்கைக்குரிய அன்னையே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே
ஞானப் பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
பக்தி நிறை பாத்திரமே
மறைபொருளின் நறுமலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன் மயமான ஆலயமே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்காலையின் விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியரின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு பெற்ற அரசியே
திருச்சபையின் அரசியே
குருக்களின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா, முழுமனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னியான புனித மரியாவுடைய வேண்டுதலினாலே, பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

  • தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்


மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடிவந்து உமது உபகாரங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியை கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபொழுதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழும் பாவியாகிய நாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.